Saturday, January 5, 2008

பொய்

நீ இல்லையெனில் நானில்லை
காதல் சொன்னது.
நீ இருக்கும்வரை உன்னோடு
நட்பு சொன்னது.
உன்னால்தான் நான்
உறவு சொன்னது.

உனக்குள்
உன்னுடன்
உன்னால்
எல்லாவற்றையும் தகர்த்தது
அவரவர் பசி.


........


தனிமை


"கவிதையெல்லாம் வேணாம்
அஜாக்ஸ் படிடா" - ஒரு நண்பன்.

"கஷ்டப்படாத மச்சி
தமிழ்லே பேசு" - இன்னொரு நண்பன்.

தட்டிக் கொடுக்க மட்டுமின்றி
தள்ளி வைக்கவும் ஆளில்லாது
தனிமையில் தவிக்கிறது மனசு
கேட்பாரற்று கிடக்கும்
பிளாட்பாரக் குழந்தையாய்


வெறுமனே பரிதாபத்தை மட்டும்
சம்பாதித்துக் கொண்டு.


........

"ச்சும்மா"



க‌ட்ட‌ணக்க‌ழிப்பிட‌ வாச‌லில்

இல‌வ‌சமாய் வான‌வில்

குழாயில் பீறிடும் த‌ண்ணீர்.

Wednesday, January 2, 2008

அண்ணாந்து பார்த்தது நீ
கண் கூசியது சூரியனுக்கு.
.......

தன்னைத் தாக்கிய கல்லையே
மையப்புள்ளியாக்கி வட்டமிடும்
நீரின் அலைகளைப் போலத்தான்
உன் மீதான என் காதலும்.
.......


'உன்னப் பெத்ததுக்கு
உலக்கயப் பெத்துருக்கலாம்'
அடிக்கடி சொல்வாள் அம்மா.
ஆசைப்பட்டது அடிமனசு
நீ அரிசி குத்தும்போது.

.......

கல்லில் கீறினேன் உன் பெயரை
சிற்பமானது கல்.