Tuesday, May 13, 2008

சாதாரணன்

தான் காதலிக்க ஒரு பெண்
தன்னை காதலிக்க ஒரு பெண்
சிரித்துப் பேசி ஆர்ப்பரிக்க‌
தோழிகளாய் சில பெண்கள்
..... .....
அன்பாய்ப் ப‌ழ‌கி
சிநேக‌மாய் இருக்கும் பெண்க‌ள்
ஏனோ சினிமா காதாநாய‌க‌னுக்கு
ம‌ட்டுமே வாய்க்கின்ற‌ன‌ர்।

Thursday, March 27, 2008

காதல் கண்கள்

வில்லாய் புருவம்
வேலாய் விழிகள்
மெல்லிடை
கார்கூந்த‌ல்

அழகுக்கு என்னென்ன‌ உவ‌மைக‌ள்
அத்த‌னையும் இருக்கும்.

பார்க்கும் எல்லோரும்
அழ‌காய்த்தான் தெரிகிறார்க‌ள்.
ஆனால்
உன்னைவிட‌ யாரும்
அழ‌கியாய் தெரிவ‌தில்லை.

Friday, March 14, 2008

எல்லாம் உனக்காக‌


நீ முத்தம் கொடுத்த‌
இதழின் ஈரம் காயாமலிருக்கவே
இல்லையேல் எனக்கென்ன தேவை
உன்னிடம் மீண்டும் ஒருமுறை
முத்தம் கேட்க?

Thursday, February 28, 2008

அஞ்சலி

என் ஆசான் பொறியாளர்,எழுத்தாளர் திரு.சுஜாதா அவர்களுக்கு கண்ணீர் அஞ்சலி.

Monday, February 18, 2008

தூண்டல்

யாருமில்லா த‌னிமை வேண்டி
ஊருக்கு ஒதுங்கிய‌ கோயிலுக்கு சென்றால்
ம‌ன‌க்குள‌த்தில் க‌ல்லெறிகின்ற‌ன
உடைந்த‌ வ‌ளைய‌ல் துண்டுக‌ளும்
காய்ந்த‌ பூச்ச‌ருகும்.


தேசம்

கையில் தட்டுடன்
மெய்யில் கந்தலுடன்
பையில் சில்லறையுடன்
சாலையோரத்தில் பிச்சைக்காரர்கள்.
சிலருக்கு பாரமுகமாய்
பலருக்கு பாராமுகமாய்
எனக்கோ பாரத‌முகமாய்...
-----------------------------------------

Saturday, January 5, 2008

பொய்

நீ இல்லையெனில் நானில்லை
காதல் சொன்னது.
நீ இருக்கும்வரை உன்னோடு
நட்பு சொன்னது.
உன்னால்தான் நான்
உறவு சொன்னது.

உனக்குள்
உன்னுடன்
உன்னால்
எல்லாவற்றையும் தகர்த்தது
அவரவர் பசி.


........


தனிமை


"கவிதையெல்லாம் வேணாம்
அஜாக்ஸ் படிடா" - ஒரு நண்பன்.

"கஷ்டப்படாத மச்சி
தமிழ்லே பேசு" - இன்னொரு நண்பன்.

தட்டிக் கொடுக்க மட்டுமின்றி
தள்ளி வைக்கவும் ஆளில்லாது
தனிமையில் தவிக்கிறது மனசு
கேட்பாரற்று கிடக்கும்
பிளாட்பாரக் குழந்தையாய்


வெறுமனே பரிதாபத்தை மட்டும்
சம்பாதித்துக் கொண்டு.


........

"ச்சும்மா"



க‌ட்ட‌ணக்க‌ழிப்பிட‌ வாச‌லில்

இல‌வ‌சமாய் வான‌வில்

குழாயில் பீறிடும் த‌ண்ணீர்.